Friday, 3 February 2012

அறிஞர் அண்ணா

 அறிஞர் அண்ணா 
பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று .அவர் பேராற்றிய அரும்பணிகளை நமது தலைமுறையினருக்கு எடுத்து வைத்தல் நம் கடமையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம்மிடையே மயங்கி பலனின்றி கிடந்த சுயமரியாதை உணர்வுகளை தட்டி எழுப்பி நம்மை முன்னேற்ற பாதையில் திசை திருப்ப வைத்த பங்கு தந்தை பெரியாருக்கென்றால் அதற்கான வழிமுறைகளை ,திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து அரசியல் வழி நின்று அன்றைய மேதகு காங்கிரசாரை எதிர்த்து இட ஒதுக்கீட்டு முறையிலும், இந்தி தணிப்பு எதிர்ப்பு முறையிலும் பிற் பட்ட சமூகத்தினர் முன்னேறி வாழ செய்தவர் இவர் இதற்கு இவர் .கையாண்ட ஆயுதம் தமிழ் இலக்கியம்,மேடை பேச்சு , தேர்தலில் வெற்றிஆகும் . தாய்மொழி ,ஆங்கிலம் என்று இருமொழி திட்டம் வெற்றி கண்டவர்.இதனால் நம்மில் ஆங்கிலம் உலக அரங்கில் வளர மறைமுக ஆதரவு தந்தவர். இதை நாம் மறத்தல் ஆகாது.தாய் மொழி சிந்தனை அறிவே இறுதி வெற்றியை கொடுப்பது என்பது இவர்தம் ஆணித்தரமான கருத்து .தற்கால தலைமுறையினருக்கு இதை உரக்கக் சொல்வது நமது கடமை. நாம் பெற்ற படிப்பு, வசதி,தரமான வாழ்க்கை இவர் இயக்கத்தாலே கிடைத்தது என்பது மறக்கமுடியாத உண்மை.
நமது ஆத்மார்த்த அஞ்லிகள் இவருக்கு சமர்ப்பணம்.









கோதைதனபாலன்