Friday, 21 September 2012
Open Window 1: Arignar Anna.
Open Window 1: Arignar Anna.: நான் அறிந்த அண்ணா ! இன்று அறிஞரின் அண்ணாவின் பிறந்தநாள். இவர் ஒரு சீர்திருத்தக் கலைஞராக பரிமளிக்கும் போதே சமுதாயக் கட்சியான திராவிடக் க...
Arignar Anna.
நான் அறிந்த அண்ணா !
இன்று அறிஞரின் அண்ணாவின் பிறந்தநாள். இவர் ஒரு சீர்திருத்தக் கலைஞராக பரிமளிக்கும் போதே சமுதாயக் கட்சியான திராவிடக் கழகத்தில் தன்னை இணைத்து, சமூக அவலங்களை மக்கள் மனதில் உறைக்கும் படி எழுதி வந்தவர். சிறந்த பேச்சாளர். படிப்ப
இன்று அறிஞரின் அண்ணாவின் பிறந்தநாள். இவர் ஒரு சீர்திருத்தக் கலைஞராக பரிமளிக்கும் போதே சமுதாயக் கட்சியான திராவிடக் கழகத்தில் தன்னை இணைத்து, சமூக அவலங்களை மக்கள் மனதில் உறைக்கும் படி எழுதி வந்தவர். சிறந்த பேச்சாளர். படிப்ப
ாளியும் கூட. ஒரு கட்டத்தில் சீர்திருத்தங்கள் மக்களைச் சென்று அடைய வேண்டுமென்று மேடைப் பேச்சோடு, மேடை நாடகங்களையும், திரைக்கதைகளையும் ஒரு சேர நடத்தி அதில் வெற்றி கண்டவர். அந்த வகையில், வேலைக்காரி, ஓர்இரவு, தெய்வத்தின் தெய்வம் , கள்வனின் காதலி போன்ற திரைப் படங்கள் வெளியாகின. இந்த தொடர்ச்சியே பராசக்தியும் வெளி வந்த விதமாயிற்று. பாரதி பெண் விடுதலையைப் பற்றி பாடினான் என்றால், இவர் ,பால்ய விவாகத்தை தவிர்த்தார். விதவைத் திருமணத்தை அங்கீகரித்தார். சமூக விழிப்புணர்வு பெண்களுக்கு நிச்சயம் வேண்டும் என்று வழியுறுத்தியவர். அன்றும் கண்மூடித்தனமாய் துறவிகளை நம்புதலும், பதின்மூன்றே வயது ஆன சிறுமிகளை ஐம்பது வயது கிழவனுக்கு கட்டி வைக்கும் நிலை நிறைந்த அளவில் இருந்தது. அச்சிறுமியர் அடுத்திரண்டு ஆண்டில் கைம்மைப் பெண் ஆகையில் சமூகத்தில் அளவளாவும் பழக்கமும், படிப்பும் மறுக்கப்பட்டு வந்தது. எல்லாச் சாதிகளிலும் தீண்டாமையின் கொடுமை தலை விரித்து தாண்டவமாடியது. இவை எல்லாம் இன்று குறிப்பாக தமிழ்நாட்டில் மாறி நிற்கும் நிலைமையை நாம் காண்பது உறுதியானால்...இவரது சிந்தனை, எழுத்துக்கள், திரைப்பட மார்க்கமாக மக்களைச் சென்று அடைந்ததுதான் காரணம். இதற்கு அரசியலில் பங்காற்றினால் தான் முழுமையான பலன் அடையலாம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.
இந்தி திணிப்பு கொள்கையை பகிரங்கமாக எதிர்த்த தோடல்லாமல் ,இருமொழி கொள்கையையை மாநிலத்தில் கடைப் பிடித்தவர். தாய் மொழி, உலகமொழி..என்பது வேண்டும் என்று கொள்கைப்பிடி கொண்டவர். மதிய அரசின் போக்கில் நாம் தப்பிக்க வேண்டுமானால் ஆங்கிலம் காற்றாக வேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழுக்கு அது கேடயமாக அது இருக்கும் என்று சொன்னவர். முதலில் தமிழ் நாடு என்ற பெயர் நம் மாநிலத்திற்கு பெற்று தந்தவர். பதவியேற்ற ஒரு வருட காலத்திலேயே ,காமராஜர், இந்திரா காந்தியின் நன் மதிப்புக்கு ஆளானவர். இவர் மீது கொண்ட அளவில்லா பற்றுதலே எம். ஜி.ஆர். கட்சி துவங்கியது. கடமை,கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று சொல் மந்திரத்திற்குச் சொந்தகாரர். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று வலியுறுத்திச் சென்றவர்.
இந்தி திணிப்பு கொள்கையை பகிரங்கமாக எதிர்த்த தோடல்லாமல் ,இருமொழி கொள்கையையை மாநிலத்தில் கடைப் பிடித்தவர். தாய் மொழி, உலகமொழி..என்பது வேண்டும் என்று கொள்கைப்பிடி கொண்டவர். மதிய அரசின் போக்கில் நாம் தப்பிக்க வேண்டுமானால் ஆங்கிலம் காற்றாக வேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழுக்கு அது கேடயமாக அது இருக்கும் என்று சொன்னவர். முதலில் தமிழ் நாடு என்ற பெயர் நம் மாநிலத்திற்கு பெற்று தந்தவர். பதவியேற்ற ஒரு வருட காலத்திலேயே ,காமராஜர், இந்திரா காந்தியின் நன் மதிப்புக்கு ஆளானவர். இவர் மீது கொண்ட அளவில்லா பற்றுதலே எம். ஜி.ஆர். கட்சி துவங்கியது. கடமை,கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று சொல் மந்திரத்திற்குச் சொந்தகாரர். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று வலியுறுத்திச் சென்றவர்.
Subscribe to:
Posts (Atom)